PANDA வால் உதவமுடியும். உங்களை அல்லது உங்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரை இதைப்பற்றிப் பேச அழைத்தல்.
புதிய பெற்றோரா அல்லது ஒரு குழந்தையைப் பிரசவிக்க இருப்பவரா? நீங்கள் உணர்வு கொள்ளும் வழி பற்றி கவலைப்படுகிறீர்களா?

உளநல சரிபார்ப்புப் பட்டியல்
உளநல சரிபார்ப்புப் பட்டியல்
உங்களுடைய உளநலம் குறித்து எவ்வாறு நீங்கள் உணர்கிறீர்கள் என்பதையும், உங்களுடைய உளநலத்திற்கான மேலதிக ஆதரவினால் நீங்கள் பயனடைகிறீர்களாவென்பதையும் நீங்கள் நன்கு புரிந்துகொள்ள உதவக்கூடிய கேள்விகளை இந்த சரிபார்ப்பு பட்டியல் கேட்கும்.
PANDA பற்றியது.
பேறுகால கவலைகள், மனஅழுத்தம் மற்றும் மகப்பேற்றுக்குப் பின்னரான உளவேதனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் மற்றும் ஒரு பெற்றாராக வருவதில் சாவால்களுக்கு முகம்கொடுத்துள்ளவர்களுக்காகவும் ஆஸ்திரேலியாவின் ஒரேயொரு சிறப்புத் தேர்ச்சிபெற்ற தேசிய ஹெல்ப்லைனை PANDA நடாத்துகிறது.
பாரதூரமானதும், பொதுவானதுமான இந்த வருத்தம் குறித்து நாங்களும் விளிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறோம். ஆதலால் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு என்ன நிகழ்கிறது என்பதை விளங்கிக்கொள்ளவும், உதவியை நாடவும் முடியும்.
“அதன் மத்தியில் நான் இருந்தபோது, நான் ஒருபொழுதும் சுகமடையமாட்டேனென உணர்ந்தேன். ஆனால் நான் சுகமடைந்துவிட்டேன்.”
மொழிபெயர்த்துரைப்பாளர்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆங்கிலம் பேச முடியாதவர்களுக்கு உதவுவதற்கும் அல்லது செவிப்புலன் அல்லது பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் மொழிபெயர்த்துரைப்பாளர்களை நாடும் வசதி PANDA வுக்கு உண்டு.
“எனக்கு ஒரு குழந்தைகிடைக்குமுன்னர் இது நடக்கக்கூடுமென எனக்கு யாரும் சொல்லவில்லை.”
எப்போது உதவியைப் பெறுவது
கர்ப்பம் தரிப்பது அல்லது ஒரு புதிய பெற்றோராவது இரண்டுமே பரவசமூட்டுவதும், சாவாலானதுமாகலாம். மாற்றங்களுக்கேற்ப சரிசெய்வதில் சில பிரச்சினைகள் வருவது இயற்கையானது. எவ்வாறாயினும், பொதுவான உயர்வு, தாழ்வு மிகவும் கடுமையான தொன்றிற்கு இட்டுச்செல்லும்போதும், அத்துடன் கடைசி இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வாரங்களாக நீடிக்கும்போதும், இது உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நேரமாகும்.
பேறுகால கவலை மற்றும் மன அழுத்தம் பொதுவானதாகும்.
ஆகக்கூடியது ஐந்து கர்ப்பவதிகள் அல்லது புதிய தாய்மார்களில் ஒருவர், மற்றும் பத்து கர்ப்பவதிகள் அல்லது புதிய தந்தைமார்களில் ஒருவர் பேறுகால கவலை அல்லது மனஅழுத்தத்தை அனுபவிப்பார்கள். கர்ப்பம் தரித்திருக்கையில் (பிரசவத்தின் முன்னர்) அல்லது பிரசவத்தின் பின்னர் வரும் முதல் வருடத்தின்போது இது நடக்கலாம். கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின் பின்னரான முதல் வருடத்தைக் ‘பேறுகாலம்’ எனும் வார்த்தை குறிப்பிடும்.
“நான் எனது துணைவர் பற்றி கவலைப்படுகிறேன் ஆனால் அவள் என்னுடன் பேசமாட்டாள்.”
பிரசவத்தின் பின்னரான உளநோய்.
பிரசவத்தின் பின்னரான உளநோய் மிகவும் அரிதானது ஆனால் கடுமையான சுகவீனம் ஒவ்வொரு 1000 இலும் ஒன்று தொடக்கம் இரண்டு வரையான புதிய தாய்மார்களைப் பாதிக்கிறது அத்துடன் தாய், குழந்தை இருவரையும் ஆபத்தில் விட்டுவிடும். அநேகமாக இது எப்போதும் வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டி ஏற்படும் இந்த நோய் அறிகுறிகள் பெரும்பாலும் திடீரென வந்து பாரதூரமான மன மாற்றங்கள் உட்பட குறிப்பிடத்தக்க பழக்கவழக்க மாற்றங்களையும், உண்மையை ஏற்காத மனப்பாங்கையும் கொண்டுவரும்.
“இந்த உலகில் மிக மோசமான அம்மா நான் தான்.”
PANDA எவ்வாறு உதவ முடியும்.
உங்கள் உணர்வு மற்றும் உள நலன் பற்றி அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரைப் பற்றி - கர்ப்பமாயிருக்கும் அல்லது புதிய பெற்றாராக இருக்கும் நீங்கள் கவலைப்பட்டால், -அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரைப் பற்றிக் கவலைப்பட்டால் - ஆதரவு தேடுவது அவசியமானதாகும். நீங்கள் விரைவாக ஆதரவு கேட்டால், விரைவில் நீங்கள் நலம் பெறலாம்.
புதிய மற்றும் கர்ப்பமுற்றிருக்கும் பெற்றோர்களுக்காக இலவச ஆலோசனை மற்றும் ஆதரவினை PANDA வினுடைய தேசிய பேறுகால உளநல ஹெல்ப்லைன் (PANDA’ s National Perinatal Mental Health Helpline) வழங்குகிறது.
எமது உயர் பயிற்சிபெற்ற மற்றும் கரிசனைமிக்க தொலைபேசி ஆலோசகர்கள் உங்கள் கவலைகளைக் கேட்டு, நலம்பெற நீங்கள் எடுக்கும் முதல் படிக்கு உதவுவார்கள்.
“நான் எவ்வாறு உணருகிறேன் என நான் எவருக்காவது சொன்னால், நான் ஒரு மோசமான பெற்றாரென அவர்கள் நினைப்பார்கள்.”
அதைப்பற்றிப் பேசுவது சிறப்பானதாகும்.
பேறுகால கவலை மற்றும் மனஅழுத்தம் ஒரு கடுமையான உடல் நோயாகும். ஒரு புதிய அல்லது கருத்தரித்துள்ள பெற்றாரை அது பாதிக்கலாம். வெட்கப்படுவதற்கு எதுவுமில்லை. அதைப்பற்றிப் பேசுவது சரியானது. உண்மையில், அதை நீங்கள் செய்வதுதான் சிறப்பானது!
உங்கள் தொல்லைகள் குறித்து ஏனையோருக்குச் சொல்வது, அல்லது உங்களுக்கு உதவி தேவைப்படுகிறதென்பதை ஏற்றுக்கொள்வது பலவீனத்தின் ஒர் அடையாளமல்ல. உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மிக உகந்தவை உங்களுக்குத் தேவையென்பதையே அது காட்டுகிறது.
“உடனடியாக எனது குழந்தையை நான் நேசிப்பேனென நினைத்தேன், ஆனால் அவளைப் பார்ப்பதையே என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.”
பேறுகால கவலை மற்றும் மனஅழுத்தம் குறித்த அறிகுறிகள்
அறிகுறிகளுள் அடங்கக்கூடியவை:
- மனக்கவலை, தாழ்வுமன நிலை, அல்லது வெளிப்படையான காரணமின்றி அழுதல்
- தொடர்ச்சியான, பொதுவான கவலை பெரும்பாலும் உங்கள் குழந்தையின் உடல்ஆரோக்கியம் அல்லது
நலம் குறித்த பயத்தில் கவனம் செலுத்துகிறது. - தடுமாற்றம் கொள்ளுதல், பயப்படுதல் அல்லது திகிலடைதல்
- சுலபமாக எரிச்சல் படுதல், அல்லது சினம் கொள்ளல்
- நண்பர்கள் மற்றும் குடும்பத்திலிருந்து பின்வாங்குதல்
- உங்கள் குழந்தை தூங்கும்போது கூடத் தூங்குவதில் சிக்கல்.
- திடீரென மன நிலை மாறுதல்
- தொடர்ச்சியான களைப்பு மற்றும் உடல் வலிமை இன்மையை உணருதல்.
- குமட்டல், வாந்தி, குளிர்ந்த வியர்வை, பசியின்மை போன்ற உடல் நோயறிகுறிகள்.
- சாதாரணமாக உங்களுக்கு மகிழ்சியைத்தரக்கூடிய விடயங்களில் ஆர்வக்குறைவு அல்லது ஆர்வமே இல்லாமை.
- தனிமையாக அல்லது ஏனையோருடன் இருப்பது
பற்றிய பயம் - மனதை ஒருமிக்க, கருத்தொருமிக்க அல்லது ஞாபகப்படுத்துவதில் சிக்கலை உணருதல்
- கூடுதலான மது அல்லதுபோதைப்பொருள் பிரயோகம்
- பயப்படல் (இதயத்துடிப்பு, படபடப்பு, மூச்சுத்திணறல், நடுக்கம், உங்கள் சுற்றாடலிலிருந்து பிரித்து
வைக்கப்பட்ட உணர்வு) - பெருவிருப்பமான அல்லது கட்டாயமான நடத்தைகளைஉருவாக்குதல்
- மரணம், தற்கொலை அல்லது உங்கள் குழந்தைக்கு ஊறு விழைவிப்பது குறித்த யோசனைகள்.
இங்கு பட்டியலிடப்படாத ஏனைய பல நோய் அறிகுறிகளும் இருக்கின்றன. இரண்டு வார காலத்திற்கோ அல்லது அதற்கும் மேலாகவோ உங்களுக்குக் கவலைதரக்கூடிய ஏதேனும் நோய் அறிகுறிகள் அல்லது சம்பவங்களை நீங்களோ அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவரோ அனுபவித்துக்கொண்டிருந்தால், தயவுசெய்து உதவியை நாடவும்.
“சகல புதிய பெற்றோர்களும் இது பயங்கரமானதென உணர்கிறீர்களா?”
எமது இலவச தேசிய பேறுகால உள ஆரோக்கிய ஹெல்ப் லைன் (National Perinatal Mental Health Helpline) ஐ அழையுங்கள்
தொலைபேசி 1300 726 306
திங்கள் – வெள்ளி காலை 9 – மாலை 7.30 AEST/AEDT
பாண்டாவின் தேசிய துரித இணைப்பு (PANDA’s National Helpline) உங்களுடைய மொழி உட்பட பல மொழிகளில் கிடைக்கிறது.
நீங்கள் பாண்டா துரித இணைப்பை (PANDA Helpline) அழைக்கும் போது, உங்களுக்கு மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவை என்பதை எங்களுக்குத் தெரிவிக்கும் “1” -ஐத்தெரிவுசெய்து அதை அழுத்தவும்.
உங்கள் அழைப்புக்குப் பதிலளிக்கும்போது என்ன நடக்கும்:
உங்கள் அழைப்புக்கு ஆங்கிலம் பேசும் ஆலோசகர் ஒருவர் பதிலளிப்பார். விருப்பமான மொழியை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - ஆலோசகரிடம் உங்களுக்கு விருப்பமான மொழியைக் கூற வேண்டுமே தவிர, நீங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டிய தேவையில்லை.
பாண்டா மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யும், அப்படி ஒருவர் கிடைக்கும்போது, நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கும் செயல்முறையைத் தொடங்குவோம்.
மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் உங்களை மீண்டும் அழைப்போம்.
உங்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் மூன்று பூஜ்யம் (000) அல்லது உள்ளூர் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவை அழைக்கவும். பாண்டாவின் துரித இணைப்பின் (PANDA's Helpline) வேலை நேரத்தைத் தாண்டி உங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால், உயிர்காப்பு இணைப்பை (Lifeline) 13 11 14 என்ற எண்ணில் அழைக்கவும்.
அடிப்படை மூச்சுப் பயிற்சி
இந்த அடிப்படை மூச்சுப் பயிற்சி உங்கள் சுவாசத்தில் நீங்கள் கவனம் செலுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தனியாக இல்லை; உங்கள் மனநலனை ஆதரிக்க பாண்டா இருக்கிறது
குழந்தை பிறப்பை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கும், புதிய பெற்றோர்களுக்கும் பாண்டா (PANDA) இலவச ஆலோசனை வழங்கி ஆதரவளிக்கிறது.
கருத்தரித்தலிலும், புதிய குழந்தையை வரவேற்பதிலும் மகிழ்ச்சியுடன், சவால்களும் ஒருசேர வருகின்றன.
உங்களுக்கு இக்கட்டான நேரமாக இருந்தால், உதவியை நாடுவதற்கு நீங்கள் பயப்பட வேண்டாம்.
நீங்கள் தனியாக இல்லை; உங்கள் மனநலனை ஆதரிக்க பாண்டா இருக்கிறது.
நீங்கள் பாண்டாவை 1300 726 306 என்ற எண்ணில் அழைக்கலாம், நீங்கள் கூறுவதைக் கவனிக்க, எங்கள் ஆலோசகர்களில் ஒருவர் இருப்பார். தொலைபேசி அழைப்புகள் இலவசம்.
அல்லது www.panda.org.au என்ற இணையதளத்துக்கு நீங்கள் செல்லலாம்.
பாண்டா தேசிய உதவி இணைப்பு (PANDA National Helpline) (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 - மாலை 7:30 AEST/AEDT)